பகுத்தறிவில் கூட்டிச்
சென்றவள்.
பாதைகள் அளந்து
என்னை அள்ளிச் சென்றவள்!!!
முட்கம்பிகள்
நிறைந்த உலகத்திலே
பூக்கள் தூவி
புது வழி காட்டிய பூ அவள்!!!
காற்றின் திசை அறிந்து
வாழ்வின் தத்துவம்
சொல்லித் தந்த ஆசான் அவள்!!!
இன்று ஒரு வருடல்
என்னை அறியாமலே
ஒரு நெருடல்!!!
பாதைகள்....
தடம் மாறுகின்றனவா!!!
பாசத்தில் போடும் வேசங்கள்
விஷங்களாக சாய்ந்திடுமா?
தாகத்தில் தடங்கள் மாறிடுமா???
காலம் இட்ட கட்டளை
பாதைகள்....
விலகிச் செல்கின்றதே!!!
வாசல் கடந்து வாரித்தை கடந்து
கோலங்கள் சிதைந்து!!!
No comments:
Post a Comment