Friday, March 30, 2012

பார்வையின் தடங்கள்


இதயத்தில் விழுந்தாள் ,
இசையாய் விழுந்தாள்
இனிமையை தந்தாள்
என்னை வென்றாள்

அவன் கண்களால் பேசினாள்
கவிதை பிறந்தது
அருவியாய் விழுந்தாள்
இசையின் இனிமை பிறந்தது..

வித்தைக்காரி என்னை-
ஆட்கொள்ள தெரிந்த சூனியக்காரி
என்னில் தன்னை விதைக்க-
தெரிந்த விவசாயி.

பட்டாம் பூச்சிகள் விலகிச்-
செல்லும் அவளைக் கண்டால்
பொறாமை பிடிச்ச பூச்சிகள்
என்னவள் அழகைக் கண்டு
பொறுக்காத வண்ணத்துப் பூச்சிகள்,

ஆளப்பிறந்தவள்
என்னோடு வாழப் பிறந்தவள்
வாழ்வின் தத்துவமும் அவளே!!!

No comments:

Post a Comment