Friday, March 30, 2012

புதுமைப் பெண்


பாரதி கண்ட...
தமிழ்...
புதுமைப் பெண்கள்...
தடம் பதிக்க....
தொடங்கி விட்டார்கள்...
உலகெல்லாம்....

அடிமை....
விலங்குடைத்து....
விலங்கு போட்டு....
இழுத்துச் செல்லும்....
துணிவும்
பிறந்து விட்டது...
எங்கள் மாதர்களுக்கு!!!

குத்து விளக்காக.....
வாசல் படி தாண்டா....
எரிந்து கொண்டு இருந்த...
தேவதைகள்...
இன்று வேதனைகள் கண்டு....
துடித்து....
வேங்கைகளாகவும் ....
மாறியும் விட்டார்கள்!!!

எங்கும்....
பெண்கள் சாதனைகள்....
எல்லாம் ஆண்களிடம்....
கண்ட வேதனைகள்!!!

பூட்டிக்கிடந்தவர்கள்....
பூகம்பம் ஆனார்கள்....
இன்று....
புரிந்து கொண்டார்கள்...
திமிர் பிடித்த...
ஆடவர் இனம்...
பாரதி கண்ட புதுமை....
பெண்களை...
புரிந்து கொண்டார்கள்...!!!

No comments:

Post a Comment