Friday, March 30, 2012

கனா கண்டேனடி தோழி.


கலங்கரை...
விளக்கு...
வா என்று அழைத்தது!!!

கால்கள்...
என்னை நோக்கி...
போ என்று சொன்னது!!!

வாடிய பயிர்கள்...
பச்சை பசேல் என்று...
கண்ணை உரசியது!!!

நாடெல்லாம்...
பொன்மாரி பொழிந்தது....
உவகையோடு!!!

நெஞ்சில்....
வஞ்சமில்லா மனிதர்கள்...
உலா வந்தனர் உண்மையோடு!!!

பாசங்கள்....
வேசங்கள் மறந்து ...
கை கோர்த்துக்கொண்டது!!!

என்ன அதிசயம்....
எல்லாமே சொர்க்கமாக....
தெரிந்தது...
நரகங்கள் தொலைந்து!!!

நடை...
பாதைகள்...
வெறிச்சோடி...
பதை பதைத்தது!!!

குடும்பங்கள்....
கூட்டுக் குடும்பங்களாகி
கண்ணைப் பறித்தது!!!!

எல்லாமே....
என்னை சுற்றி...
நன்றாக நடந்தது...
தூக்கத்தில் மட்டும்!!!

No comments:

Post a Comment