Friday, March 30, 2012

திருடி


தொலைத்து விட்டேன்
என்னில் எதையோ
தொலைத்துவிட்டேன்!!!

தூங்கப் போனேன்
தொலைந்தது தூக்கம்!!!
சாப்பிட வந்தேன்
தொலைந்தது பசியும்!!!

நடந்து சென்றேன்
கடந்து சென்று விட்டேன்
போகவேண்டிய இடத்தை
மறந்து சென்று விட்டேன்!!!

அவளின் ஒரு பார்வையில்
இவ்வளவு விசயமா?
இல்லை விஷமா???

கண்ணால் மட்டும் தானே
பேசினாள்.
கண்டபடி புலம்புவது நானல்லவோ!!!

காயங்கள் பட்டது போல்
ஏதோ ஒரு வலி கொல்லுதே
தினம் என்னை மெல்லுதே!!!

அவள் என்னிடம் இருந்து
எதனை எடுத்து சென்றாள்?
இல்லை......
இல்லை திருடி சென்றாள்!!!

ஓரப் பார்வையால்
ஒதுங்க வைத்தவள்
என்னை....
மயங்க வைத்தவள்!!!

தேடுகின்றேன்....
தொலைத்துவிட்டு தேடுகின்றேன்
எடுத்து சென்றவள்....
தூங்குகின்றாள்
தொலைத்து விட்டு..
ஏங்குகின்றேன்????

No comments:

Post a Comment