Friday, March 30, 2012

நஞ்சான நட்பு


தோளில் கை போட்டு
நெஞ்சால் துடி துடித்து
என் கண்ணில் தூசி கண்டு
அவன் கண்கள் கலங்கியது
அதனை நினைத்தே...
என்னிதயம் வென்றது!!!

இன்றோ வாள் கொண்டு...
கழுத்தறுக்க துடிக்கும்
குணம் கண்டு...
என்னிதயம் வெந்தது!!!

கற்கண்டு...
பேச்சில் மயங்கினேன்
இன்றோ பேச்சுக்கு பேச்சு
விஷம் கண்டு
என்னிதயம் வெறுத்தது!!!

நட்பு ஒரு நாடகம் போல்
உரைத்தது...
உண்மையானர்வர்களை கூட...
இப்பொழுது என்னிதயம்
ஏற்க மறுக்கின்றதே
போலிகளை கண்டு கண்டு.

No comments:

Post a Comment