Friday, March 30, 2012

இராட்சசி


என் எலும்பை...
உருக்கி...
சுவை பார்க்கின்றாயா?!!!

உன்...
விரதம் முடியவில்லையா...
இரத்த பசி அடங்கவில்லையா?!!!

காதல் கொண்டேன்...
கனவில் தினம் மிதந்தேன்...
உன்னால் இன்று தவித்தேன்!!!

உண்மையை சொல்லடி....
என்னவளே...
உண்மையை...
மட்டும் சொல்லடி...
உனக்குள் நான் தான்...
துணிந்து சொல்லடி
என்னவளே!!!!

பாடையில் ஏற்ற....
துணிந்து விட்டாய் இராட்சசி...
போக முடியவில்லை..
உன்னை தவிக்க விட்டு!!!

காலத்தில் என்னை
ஆளும் வேதனை தான்....
அடங்கட்டும்....
எனக்குள் அடங்கட்டும்!!!

என்னுயிர்...
அழிந்து போகட்டும்...
உன் நினைவு அழியா...
என் உடல் மட்டும் அழியட்டும்!!!

No comments:

Post a Comment