Friday, March 30, 2012

எனக்குள் ஓர் கடிதம்


முகவரி...
தொலைத்து விட்டு...
முகவுரை தேடுகின்றேன்!!!

காதலை....
மூடி வைத்து....
கவியுரை வடிக்கின்றேன்!!!

இதயத்தில்...
கோயில் கட்டி...
சாமியை தேடுகின்றேன்!!!

காலத்தை...
தொலைத்துவிட்டு...
கருணையாய் பாடுகின்றேன்!!!

என்னவள்...
விலாசம் எனக்குள்...
மறைத்து வைத்து...
எங்கேயோ வாடுகின்றேன்...

அவள்....
ஒரு நிலவு...
ரசிக்கின்றேன்...
தினம் தினம்....
வசிக்கின்றேன்...
அவள் மோகத்தில்...
என்னையே மறந்து!!!

பாவம் அவள்...
பார்வையில்...
கள்ளம் இல்லை....
கருணை உள்ளம்...
மனதில்....
வஞ்சம் இல்லை!!!

எனக்குள்...
ஏன் இந்த வஞ்சம்...
அவள் வார்த்தையில்...
நான் கொண்ட தஞ்சமா?...

எனக்குள்...
ஏதோ ஒரு மாற்றம்...
என்னை அறியாது...
ஒரு வாட்டம்...
அவள் மேல் ஒரு நாட்டம்!!!

தூது...
செல்லாயோ தென்றலே....
என்னவள் விலாசத்தை....
தேடிச் செல்லாயோ....????

No comments:

Post a Comment