Friday, March 30, 2012

கண்


இதயத்தில்
பூட்டி வைத்து நித்தம்..
அழகு பார்க்கின்றேன்...

இதயத்தில்...
பூத்தவள் என்னோடு
மட்டும் வாழ்கின்றாள்....

யாருக்கும்...
வஞ்சமில்லை
என்னுடைய நெஞ்சத்தில் மட்டும்
அவள் வாழ்வதால்!!!.

யாருக்கும்...
பஞ்சம் இல்லை....
அவளிடம் நான் சேர்வதால்

கண்கள்...
எனக்கு கலங்கியதில்லை
பார்வையாக அவள் இருப்பதால்

தேவதை...
என்னை ஆண்டுகொண்டு....
இருக்கும் புதுத் தோகையவள்???

No comments:

Post a Comment