Tuesday, April 17, 2012

நதிக்கரையில்....


நீண்ட...
காலம்...
காத்து இருந்தேன்...
இளவம்....
காத்த கிளி போல...!!!

கண் முன்னே..
துள்ளித் திரிந்தது...
நான் ரசித்த...
மீன் குஞ்சு...!!!

காத்திருந்தேன்...
காலமெல்லாம்...
எனதாக்கி கொள்வேன்...
எனக்குள்...
ஒரு இறுமாப்பு...!!!

வாய்...
மொழிகள்...
மட்டும்...
பரிசாகப் பெற்றேன்...!!!

காலத்தின்...
மொழிகளை...
கனவாக ...
கண்டுகொண்டேன்...!!!

பாவமறியா....
மீன் குஞ்சும்...
துடியாய்...
துடிக்கின்றதே...!!!

கண்ணீர் கூட...
யாருக்குத் தான்...
தெரியப்...
போகின்றதோ...!!!

கொக்குகளும்...
வட்டமடிக்கின்றது...
என்...
கண் முன்னே!!!

காத்திருந்த...
என் விழிகள்...
கானலாகப்...
போய்விடுமோ...
காய்கின்றேன்...
நான் இங்கே...!!!

No comments:

Post a Comment