Tuesday, April 17, 2012

ரோஜா மலர்


உதிராத...
புதிய மலரே...
உன்...
புன்னகை..
மட்டும்...
உதிரக் கண்டேன்...!!!

யாருக்கும்...
பணியாத...
உன்...
உள்ளம்...
அன்புக்கு ...
அடிமையாகும்...
அழகில்...
வீழ்ந்தேன் நானும்...!!!

நீயோ...
ஒரு...
தனிப்பிறவி
உன்னால்...
வாழ்பவர் முன்...
நீதான்...
புதுப் பிறவி ...!!!

உன்...
கண்கள் மட்டும்...
தேடும்...
கலங்கும்..
கண்களுக்கு ...
கனிவுரை...
சொல்லத்தானே...
தினம் துடிக்கும்...!!!

காதல்.....
வார்த்தை...
உன் பக்கம்....
வந்ததில்லை...
உன்....
வார்த்தைகளில்...
நடிப்பு ...
இல்லாததால் தானோ....!!!

இன்றோ...
உன் மனதில்....
ஒரு சஞ்சலம்...
உனக்கே....
தெரியா ஆதங்கம்....
உன்னைக் கொள்கின்றதே...
நடிகனின் கைகளில்....
சிக்கிகொண்டாயா....
உன்னை அறியாமலேயே...!!!

No comments:

Post a Comment