Thursday, April 19, 2012

பூப்படைதல்...!!!


கூனிக்குறுகி...
கூட்டத்தின் முன்...
அவள் இருக்க....!!!


தாய் தந்தையரோ...
வந்த கூட்டத்தை...
எண்ணிப்பார்க்க...!!

வெற்றிலை...
பாக்குகள்...
சுற்றி நின்று...
வேடிக்கை பார்க்க....!!!

பருவ மாற்றத்தில்...
பெண்ணவளும்...
நெளிந்து நிற்க....!!!

என்னடா சோதனை...
தமிழச்சியாய்...
பிறந்தால்...
வந்த வேதனையா...!!!

என்ன நடந்தது...
ஏன்...
இந்த திருவிழா...
பெற்ற...
மகளை வைத்து...
பொருட்காட்சியா....!!!

பரிசுப்பொருட்களும்....
குவிகின்றது...
அவள்...
மனமோ...
வெந்து சாகின்றது...!!!

யாருக்கு தெரியும்...
அவள்...
மன உளைச்சல்கள்...!!!

பெண்ணாக...
பிறந்ததால் தான்...
அவளுக்கு...
வந்த விதியா...!!!

பெற்றவளும்...
பெண் தானே...
அவளின் கூச்சம்...
தாயவளுக்கும் ...
புரியவில்லையா?...!!!

கேடு கேட்ட...
மனித இனமே...
சிந்தித்து பார்...
பருவ மாற்றமும்...
கொண்டாட்டமா?...!!!

No comments:

Post a Comment