Thursday, January 10, 2013

மரணம்



கருணை...
மனம் கொண்டு...
கட்டியணைக்க...
தேடிவரும்...
சொந்தம் தானே...
பிறக்கும் பொழுதே...
உன்னோடு...
பிணைந்துவிட்ட...
பந்தம் தானே...!!!

காற்றுக்கள்...
கொஞ்ச நேரம் அசந்து...
தூங்கிவிட்டால்...
உன் மூச்சுகள்...
முண்டியடிக்குமே...
புதிய முகவுரை...
தேடித்தான்...
தந்தியடிக்குமே...!!!

எல்லோருக்கும்...
எப்பொழுதுமே...
ஒருகாலம் உண்டு...
யார் முந்தி...
போவதில் தானே
சோகமும் உண்டு...!!!

ஆசைகளை மூட்டை கட்டி...
சுமக்கத் துடிக்கும்...
மனிதனே...
மோகங்கள் உன்னை...
வாட்டி வதைக்கின்றனவே...
நீ வாடாமல்...
வாழ்ந்து விடுவாய் என்ற...
நம்பிக்கையில் தானோ...!!!

No comments:

Post a Comment