Wednesday, January 16, 2013

தொழிலாளர் தினம்...!!!



முதலாளிகள்...
வர்க்கத்தை...
அடக்க...
நினைத்த தினமா...!!!

இல்லை...
முதுகெலும்பு
முறிந்தும்
வாழ்வில்...
வசந்தமில்லா...
துடித்த தினமா...!!!

காலமெல்லாம்...
கனவுகளில் மிதந்து...
கை நழுவிப் போகும்...
உண்மை...
உணர்வுகளில் துடிக்கும்...
உணர்வாளர்களின்...
தினமா...!!!

எத்தனை...
குமுறல்கள்...
ஓங்கி ஒலித்தும்...
செவிடர் காதுகள்...
திறந்து...
கொண்டு தான்..
விட்டதா...
வசந்த வாழ்வும்...
இவர்கள் பக்கம் ...
திரும்பித்தான்...
விட்டதா...!!!

தொண்டைத் தண்ணி...
வற்றும் வரைக்கும்...
நாங்களும்...
விடோம்...
விடியலுக்காக...
விடியல்...
எங்களுக்காக....
விடியும் வரைக்கும்...!!!

No comments:

Post a Comment