Wednesday, January 16, 2013

உணர்வுள்ள உள்ளம்...!!!



உள்ளுக்குள்...
பூட்டி வைத்து....
கண்ணீர்த் தொட்டிகள்...
சுமந்து வாழும்...
பேதை அவள்...!!!

மனது...
தூய்மையானதால்...
வேதனைகள்...
தேடிவந்து...
அவளை...
ஒட்டிக்கொண்டதோ...!!!

கலங்கரை விளக்காய் ...
அவள் இருந்தாள்
பல பேருக்கு...
இன்று கலங்கி...
நிற்கிறாள்..
பதில் தெரியாது...!!!

பதில்களும்...
சுருங்கிக் கொண்டு...
கேள்வியாக...
வாட்டி...
வதைக்கின்றதே...!!!

கரு மேகங்கள்...
சூழ்ந்து...
கொண்டதோ...
இவள் கண்ணீரை...
மறைக்கத் தான்...
காற்றோடு...
இடியுடன் மழையும்...
தெறித்ததோ...!!!

அவள்...
வீழ்ந்து கிடக்க...
யானை இல்லை...
அழகிய குதிரை..
மீண்டு வருவாள்...
என் கண்முன்னே...
வாழ்ந்து காட்டுவாள் ...!!!

No comments:

Post a Comment