Saturday, January 19, 2013

சொல்லத் தெரியவில்லை...!!!






சொல்லி...
சொல்லிப் பார்த்தேன்...
உள்ளம் புரியவில்லை...
எனக்கு சொல்லவும்...
தெரியவில்லை...!!!

கண்ணீர் கொண்டு...
கருத்துக்களையும்...
விழுங்கினேன்....
பன்னீர் தெளித்து...
அணைப்பார் என்று...
வெந்நீராகிப் போனதே...
வேதாந்தங்கள் எல்லாம்...!!!

மூட நம்பிக்கைக்கு...
முழுக்குப் போட்டேன்...
முன்னாள் வந்து...
சம்மணம் கட்டியதே...
என் கையைப்...
பிடித்துக்கொண்டே...!!!

காதலுக்கு...
கைகள் நீட்டி...
கண்ணைக் குத்தியே...
நானும்...
அணைத்துக்கொண்டேன்...
கரங்கள் வெட்டுப்பட்டது...
தெரியாமல் நானே...!!!

பிரபஞ்சத்தில்...
இறக்கை கட்டித்தான்...
நானும் பறக்கின்றேன்...
வழி தெரியாமல் ...
இறங்கத்தான்...
தடமின்றி தவிக்கின்றேன்...!!!

எல்லாமே...
சொல்லத்தான்...
துடிக்கின்றேன்...
சொல்லத் தெரியாததினால்...
எனக்குள்ளே...
மறைக்கின்றேன்...
வார்த்தைகள் இன்றியே...!!!

No comments:

Post a Comment