உன் நினைவுகள்...
என்னுள்...
தாலாட்டும் பொழுது...
என்னை மறந்தே...
நானும் மிதக்கின்றேன்...!!!
கண்களின் கருவிழிகள்...
கவிபாடத்தான்...
என்கரங்கள்...
பற்றுகின்றனவே...
கைவிரல்களில்...
குளிர்காற்றுக்கள் வந்து...
முத்தமழை இட்டுத்தான்...
செல்கின்றனவே...!!!
பஞ்சாக மனம் வெந்து ...
அவளைக் காணாது...
தினம் நொந்து ...
முத்தாகத் தான்...
வெடித்துச்சிதறி...
வேடிக்கை காட்டுகின்றனவே...
என் இதயமும்...
மஞ்சத்தில் நனைகின்றதே...!!!
புயல் காற்றுக்கள்...
கடந்து செல்கின்றன...
புண்ணியம் செய்த...
மழைத் துளிகள்...
என்னை நனைத்து...
மகிழ்கின்றன ...!!!
பனிக்கட்டிகள் என்னை...
மூடிக்கொள்கின்றன...
இருந்தும் சுடுகின்றது...
என்னை தொட்டு மகிழும்...
குளிரை மறந்தே...!!!
No comments:
Post a Comment