Wednesday, January 16, 2013

முதுமை....!!!





முகமும் உடலும்...
தளர்வடைந்து....
சுருக்கம்...
கண்டதால்...
முதுமையா...!!!

உலகத்தின்...
அநீதிகளை...
கண்டு வெடித்து...
கிடைத்த...
எதிரொளிகளா...!!!

கோலத்தின்...
நடுவே....
காலத்தை...
வென்றவர்கள்...!!!

முகவுரை...
தொலைக்கா...
முத்துக்கள்..
தேடியவர்கள்...!!!

மௌனத்தில்...
இன்று...
பல சிற்றாலயங்களில்...
பதுங்கிக் கொண்டார்கள்...
உடல் தளர்ந்து...
விட்டதால் தானோ...!!!

குழந்தைகளின்...
மனதோடு மனதாக...
ஒட்டிக்கொண்டார்கள்...
முதுமை தந்த...
பாடத்தினால் தானோ....

காவோலை...
விழ...
குருத்தோலை...
சிரிக்கவில்லை...
சிந்திக்கின்றது....!!!

No comments:

Post a Comment