ஊமை விழிகள்
பேசிக்கொள்ளும் பாஷையில்
தடுமாறி தன்னம் தனியே
எனக்குள் ஒரு சதுரங்கம்
நானே வரைந்து கொண்டு
வாழ்க்கை என்னும் ஓடத்திலே...
பயணிக்கின்றேன்...
பாதைகளை
வரைந்துகொண்டே...!!!
காலம் தான் கயிறு கட்டி...
கண்
வைக்கத் துடிக்கின்றது
கருமேகங்கள்
சூழ்ந்துகொண்டு என்
இதயத்தைத் தான் பதம்
பார்க்கின்றனவே...!!!
பார்த்து மறந்து
பழகித்தான் போனது
பைத்தியம் குறைந்து
எனக்கும் முதுமைகள்
பிறந்த பொழுதும் கூட
கனத்த மழையினுள்
வாழ்வும்
நனைந்து தான் போனது...!!!
வீசிய புயலின் ஊடாக
வீராப்புடன் நடக்கின்றேன்
வார்த்தைக்கு வார்த்தை
முழங்கும்
கருத்துக்களைக் கூட
காணாது நானும்
மறைகின்றேன் உன்னோடு
பயணித்துக்கொண்டே...!!!
No comments:
Post a Comment