Monday, January 21, 2013

நடுக் காட்டில்....!!!





திக்குத் தெரியாத...
காட்டில்...
விடப்பட்டாளா...!!!

கண்கள் மூடி...
கவி வடித்தவள் இதயம்...
இன்று கிழிக்கப்பட்டு...
அவள் கண்களில்...
அருவி ஊற்றேடுத்ததே...!!!

பாவத்தைக் கண்டு...
கலங்கும் இதயம்....
இன்று சாபத்தில்...
தடுமாறி நின்றதோ...!!!

வேஷம்...
போடத் தெரியாததால்...
வனவாசம் போல்...
அவள் உள்ளத்தை...
மாற்றிக்கொண்டாளா...!!!

கலங்கம் இல்லாதவள்....
கலங்குவது...
அவளின் வலியில்...
குளிர் காய...
நினைப்பவர்களுக்கு...
புரியாதோ...
இல்லை புரிந்தும்..
புரியாது புது வேசமா...!!!

அவள் என் பார்வையில்...
என்றும் என்...
கண்பாவையில்...
என் இதயத்தின்....
ஓரப்பார்வையில்...!!!

No comments:

Post a Comment