பாவம் செய்தவன்...
தப்பி விட ...
பழி....
பாவப் பட்டவள் பக்கம்
ஒட்டிக்கொண்டதே...!!!
யாதும் அறியா...
பேதை வாழ்வோ ...
நாதியற்று...
நடைபிணமாக...
நாட்கள் சிதைந்ததே...!!!
வஞ்சகன் யார் தானோ ...
நஞ்சைக் கலந்து விட்டு...
நாயகனாக வேஷம்...
போடுகின்றானே ...
துடிப்பது மௌனம் தானே...!!!
பார்த்து பார்த்து...
பழகிய உள்ளம்...
பருதவிக்கின்றதே...
பாதைகள் குத்திக்கொண்டதா...!!!
வார்த்தைகள்...
சிதறியது இல்லை...
இன்று வாட்டமும்...
சேர்ந்துகொண்டதால்...
அவள் வாழ்வும்...
திசையை...
மாற்றிக்கொண்டதா...!!!
காலங்களும் பதிலைத் தேடி...
அலைகின்றன...
பதிலும் சேர்ந்து...
பொய்யானதால்...
கரையத் தொடுமா...
பேதையின் வாழ்வும்...!!!
No comments:
Post a Comment