Monday, January 28, 2013

காற்றுக்கென்ன வேலி...!!!


சுதந்திர காற்றில்...
மூச்சு...
விட வேண்டும்...
தூய்மையான...
அன்பு...
பக்கம் வேண்டும்...!!!

காலம் வந்து...
கை...
கோர்க்க வேண்டும்...
கனத்த இதயங்கள...
பண்பாய்..
மாறிட வேண்டும்...!!!

தேடலும் கூடலும்...
இனிதாய்..
மலர்ந்திட வேண்டும் ...
இன்பம் மட்டும்...
சேர்ந்திட வேண்டும் ...!!!

வாட்டமும் நோட்டமும்...
மறைந்திட வேண்டும்...
மனித முகங்களில்...
மாற்றங்கள் வேண்டும்...
அன்பான மாற்றங்கள்...
வேண்டும்...!!!

பிறந்தோம் வளர்ந்தோம்...
கண்டது என்ன...
கற்பனையிலா ...
முடிந்திட வேண்டும் ...
சாதனை...
வாழ்வில் தானே ...
முடிந்திட வேண்டும்...!!!

இத்தனை தடைகள்...
யாருக்கு வேண்டும்...
வேலியத் தாண்டும்...
பயம் தான்...
யாருக்கு வேண்டும்...!!!

வஞ்சமில்லா...
நெஞ்சமுள்ளவன்...
வாழ்வில்...
தடை போடத்தான் ...
யார் உண்டோ...
யாருக்குத் தான்...
துணிவுண்டோ...!!!

No comments:

Post a Comment