ஏதோ ஒரு...
புதிய பரவசம்....
என்னைத் தொட்டு...
நலம் விசாரித்தது...!!!
உடம்பெல்லாம்...
புத்தியிர் பெற்று...
புன்னகைத்தது...!!!
மனதை...
உருவிவிட்டு...
உள்ளே...
ஒரு இன்பக்காற்று...
முத்தமிட்டது...!!!
எனக்கே...
புரியாத...
ஒரு ஏக்கம்...
ஏன் இந்த தாக்கம்...!!!
வானத்தில் இருந்து....
புதிய ஓசையா...
இல்லை...
புரியாத பாஷையா...!!!
கண்கள்...
பேச மறுக்கின்றது....
காதில் வந்து...
சொல்லிப்...
போனதோடு சரியா...!!!
நிச்சயம் என்னில்...
ஒரு மாறுதல்...
தெரிகின்றது...
எதனைக்கண்டேன்...
நான் இன்று...!!!
இளவல்...
காத்த கிளிபோல்...
துடித்த மனசு...
புது உவகை...
கொண்டதேன்...!!!
மனசும்...
சுவைத்தது ....
தேனுண்ட ...
சுவையாகவே
உணர்ந்தது...!!!
கண்களும்...
குளமாகின்றது...
கருத்துக்கள்...
சேர்ந்துகொண்டனவா...!!!
நிலவவள்...
நெஞ்சைத்...
தொட்டதால்...
எல்லாமே...
மாறி விட்டதா...!!!
No comments:
Post a Comment