Tuesday, January 15, 2013

காகித ஓடம்...!!!





விளை நிலத்தில்....
பயிரிட்டோம்....
விதை நெல்லை...
தொலைத்துவிட்டு...!!!

களை பிடிங்கி...
வாழ்வை...
தொடங்கி...
நிலை தடுமாறி...
நாம் நின்றோம்...!!!

நீதிமான்கள்...
கூடிவிட்டதால்...
சட்டங்கள்...
தலை தெறித்ததோ...!!!

சாமானியர்...
தப்பித்துவிட...
தரித்திரம்...
யாரைத்தொட்டதோ...!!!

யாரை...
வசைபாடி...
யாரிடம்...
முறையிடுவோம்...
யதார்த்தங்களை...!!!

கதிரவனும்...
கோபித்துகொண்டு...
சென்றுவிட்டான்...!!!
இருலவனும்...
தேடிவந்து...
அணைத்துக்...
கொண்டான்...!!!

இருதலைக்கொல்லி...
எறும்புபோல்....
தடுமாறி...
தாகம்கொண்டோம்...!!!

கூட்டான்...
சோற்றுக்குள்....
குழவிகள்...
கூடுகட்டுதே...!!!

குயில்கள்...
குரல் மாற்றி...
அலறுகின்றதே...
யாரைக்கண்டு...!!!

யாவரும்...
ஓடத்தில்...
புறப்பட்டுவிட்டோம்...
ஓடமும்..
கரைவது தெரியாது...!!!

No comments:

Post a Comment