Tuesday, January 15, 2013

தூங்காத இரவுகள்...!!!



நினைவுகள்...
தடம்...
பிரண்டதால்...
நிர்க்கதியானேன்...
நிலை தடுமாறியே...!!!

கதிரவனின்...
வரவுக்காக...
பல இரவுகளை...
தொலைத்துவிட்டேன்...
என்னை மறந்தே...!!!

மலர்கள்...
மலர்கின்றன...
என்னைகண்டு...
வாடுவதேனோ...!!!

முற்கள் மட்டும்...
சொந்தாமகின்றனவே...
என் முகராசியில்...
கோளாறு....
இருப்பதால் தானோ...!!!

என் பயணமும்...
கரடு முரடானதே...
பாதைகள்...
பிழையாகி...
விட்டாதாக...
உணர்கின்றேனே...!!!

ஏதோ ஒன்று...
தனிமையில்...
கூட்டிச் செல்கின்றது...
தாகம் தீர்ந்திடுமா....
இல்லை அதுவே....
நிரந்தரமாகிடுமா...!!!

அவள்....
வாழ்வு மலர்ந்திட...
கொடுப்பதற்கு...
ஒன்றும்....
இல்லையே என்னிடம்...
கெடுக்காமலாவது...
விலகிச் செல்கின்றேன்...

காலத்தை நோக்கி...
நகர்கின்றேன்....
என் கவிகளுக்கு...
ஓய்வு கொடுத்து...
என்னை....
இழந்துகொண்டே...
அவள் வாழ்வுக்காக...!!!

No comments:

Post a Comment