தண்ணீரிலும்...
கண்ணீரிலும்...
வெந்திடும்... இவர்கள் காலம்...!!!
கடல் அன்னை...
அணைப்பினிலே...
ஓடிடும்...
இவர்கள் வாழ்வோ...!!!
நிலையில்லா வாழ்வு....
நிம்மதியில்லா....
ஓடம் தானே...
இவர்கள் காலம்...!!!
நித்திரை இல்லா...
பத்திரமாக....
திரும்பும் வரை...
ஏங்கும் உள்ளங்கள் தான்...
எத்தனை எத்தனை...!!!
கடல் மாதா...
கருணை...
தொலைத்தால்...
கலங்கிடும் ஊரே...!!!
வயிற்றுப்பசி...
ஆற்றிடவே...
அனுபவிக்கும்...
வேதனைகள் தான்...
எத்தனை...!!!
உப்பு நீரில்...
வாழ்வதால்...
தன்னம்பிக்கை...
இவர்கள்...
கூடப்பிறந்த சொத்தோ...!!!
தன் மானம்...
விட்டுக்கொடுக்கா...
போராடும் குணம்...
இவர்கள் வசமோ...!!!
எத்தனை...
உள்ளங்களுக்கு...
தெரியும்...
இவர்கள் படும்...
வேதனை சோதனை...!!!
விவசாயி...
சேற்றில்...
கால்...
வைத்தால் தான்...
மனிதனுக்கு சோறு...!!!
மீனவன்...
கடலில்...
கால்...
வைத்தால் தான்...
சோற்றுக்கே குழம்பு....
No comments:
Post a Comment