Friday, February 1, 2013

வேதம் சொல்லும் கதை...!!!





பழைய...
பஞ்சாக்கம்...
பார்ப்பதற்காக...
சாஸ்திரியை...
தேடிச் சென்றேன்...
என்...
கன்னிப்பருவதில் தான்...
கண்டம் என்றார்...
காண்டம் படிச்சு ...
என் கையில்...
இருந்ததையும்...
பிடிங்கிக்கொண்டார்..!!!

முஸ்லிம்...
நண்பர் கூட...
என்னைப் பார்த்ததும்
அல்லாவின்...
நாமம் சொல்லு...
எல்லாமே...
வெற்றி தான் என்றார்...
அதையும் செய்து...
பார்த்தேன்...!!!

கிறிஸ்தவ தந்தையோ...
சமயம் மாறு...
வாழ்வே...
மாறும் என்றார்...!!!

நானோ எல்லா...
சமயமும்...
மாறிப்பார்த்தேன்....
எல்லா வழியிலும்...
தேடிப்பார்த்தேன்...
நிம்மதி மட்டும்...
கிடைக்கவே இல்லை...!!!

இன்று...
மனிதனாக மட்டும்...
மாறிப்பார்த்தேன்...
என்னைத் தேடி...
நிம்மதி தானாக வந்தது...
நிரந்தரமாகவே...!!!

No comments:

Post a Comment