சிறகடித்து பறந்தவள்....
இன்று மனதால்...
சிதைந்து போய்...
போகின்றாள்...!!!
கவலைகள்...
அவளை தொட்டதில்லை...
காரணம் இன்றி...
யார் கண்ணும்....
அவள் மேல்...
பட்டதில்லை...!!!
இன்றோ...
நடைபிணம்...
ஆகிவிட்டாள் ...
பலர் கண்கள்...
அவள் மேல் பட்டு...
பாடாய்ப் படுத்தியதால் தானோ...!!!
அமைதி தேடி...
அலைகின்றாள் ...
ஆறுதலுக்கு ...
யாரும் இல்லாததால்...
இன்று தான்...
உலகையும்...
புரிந்து கொண்டாளோ...!!!
காவலாய் வந்தவன்...
கண்ணீர் தந்து...
சென்றுவிட ...
கண்ணீர் துடைக்க...
நின்றவன்...
கைகள் இழந்து...
நிற்கின்றானே ...
அவள் கண்ணீரை...
நிறுத்த...
பலர் கண்கள் தான் ...
சிதைகின்றதே...!!!
பாடாய் படுத்தும்...
வாழ்வை மறந்து...
எங்கோ போகின்றாள் ...
கால்களுக்கு தான் தெரியும்...
நிறுத்தும் இடமும்...
நிம்மதி உறைவிடமும்...!!!
அம்முவாகிய அவள் ...
இதயப் பாரத்தை...
அணைத்துக்கொண்டு...
புறப்பட்டு விட்டாள் ...
புது வாழ்வைத் தேடி...!!!
புயல் காற்றுக்களும்...
ஓயட்டும்...
புது வாழ்வும்..
அவளை ...
அமைதியாக்கட்டும்...
அமைதி தான் கிடைக்குமா?... !!!
No comments:
Post a Comment