Sunday, February 24, 2013

யாரடா நீ..???



கண்களால்...
நம்ப முடியவில்லை...
உடலோ ...
உதறல் எடுத்தது...!!!

தேடித் தேடி...
கட்டியணைத்து...
காதல் செய்தவள்...
என் கரங்கள் பற்றி...
விட்டுவிடாதே...
செத்துவிடுவேன்....
கண்ணீர் சுரந்து...
கதைகள் சொன்னவள்...!!!

ஏழாண்டுகள்...
இதயத்தில்...
ஒட்டி உறவாடி...
பிரிவென்னும் வார்த்தையை...
வெறுத்துக் கொண்டவள்...
சொர்க்கம் என்னும்...
சுதந்திரத்தை....
எனக்குள் விதைத்து...
நின்றவள்...!!!

ஐந்து நாட்கள் முன்...
யாரோ ஒருவனுக்கு...
கழுத்தை....
கொடுக்கப் போகின்றேன்...
வந்து அள்ளிப்போ...
கண்ணுடைந்து...
கலங்கி தூதுவிட்டவள்...!!!

தேடிச் சென்றபொழுது....
செருப்பைக்...
காட்டாத குறையாக ....
யாரடா நீ என்று உமிழ்ந்து
கேட்டாளே ஒரு கேள்வி...!!!

அவள் புதியவனிடம்...
புது புது கதைகள்...
புனைந்து புகழுகின்றாள் ...
அவனும் நம்பியே....
என்னை சபிக்கின்றான்...!!!

அவள்...
நினைவுகளோடு....
நானும் மௌனமாகின்றேன்...
ஒரு ஏமாளியாக...!!!

No comments:

Post a Comment