Sunday, February 24, 2013

என் வாழ்வில்...!!!



இருட்டில்...
வெளிச்சத்தை...
தேடிக்கொண்டு...
கற்பனையில் கடிதம்...
வரைகின்றேன்...!!!

கடந்து வந்த பாதைகள்....
கரடு முரடாகியதால்...
கவனங்கள்...
சிதருகின்றதோ...!!!

கால்கள் தேய்ந்து...
வந்த காயங்கள்...
பல கதைகள்...
புனைகின்றதே...
என்னை மயக்கி...
எதையோ சொல்ல...
துடிக்கின்றதே...!!!

வேதனைகள் எனது...
விளையாட்டு மைதானம்...
வெற்றிகள் தான்....
என் எட்டாக் கனிகள்...!!!

காலங்கள் தான்...
என் கருணைப் படிகள்...
கண்ணீரோ...
என் ஊற்றுக்கள்...
யாருக்கு தான் உதவிடும்...
இந்த உப்பு நீரோ ...!!!

என் பார்வையில்...
எல்லாமே...
வசந்த காலங்கள்...
பக்கத்தில்...
போனால் தான்...
தெரிகின்றதே...
என் பைத்திய பார்வைகள்...!!!

கண்கள் மூடி...
காதுகளை அடைத்து...
என்னை மறந்து....
வாழ்ந்து பார்க்க...
துடிக்கின்றேன்...
மற்றவர் நாக்குகள் வந்து...
என்னை தூண்டி இழுக்கின்றதே...
மூடி இருந்த...
என் காதுகள் கூட ...
வெடித்து சிதருகின்றதே...
அவர்கள்...
நாக்குகளின் உக்கிரத்தால்...!!!

என் கைகள்...
எதையோ கிறுக்க...
துடிக்கின்றன....
அர்த்தங்கள்....
மாறிப் போவதால்...
என் மனமும் தடுக்கின்றது...!!!

வாழ்வை நோக்கி...
நகர்கின்றேன்...
என்னை....
நம்பியோரை நம்பி ...
அவர்கள்....
கைகள் பற்றிக்கொண்டு...!!!

No comments:

Post a Comment