எனக்குள் விதையாகி....
என் வளர்ச்சியில்...
உரமாகி...
உண்மையாகப்....
பூரித்துப் போகின்ற...
என்னவள்....!!!
என் நடைபாதைகளின்...
தடைகளை...
சுத்தம் செய்து...
என்னை...
தாலாட்டும் தாயவள்..
என்றும் எனக்காக...
வாழ்ந்திடும் தூயவள்...!!!
எதையோ நினைக்கின்றேன்...
ஏனோ துடிக்கின்றேன்...
வாட்டத்தில் மூழ்கினேன்...
இருந்தும்...
வார்த்தைகளினால்...
என்னை வாழ வைக்கும்...
வசந்தகால...
தென்றலும் அவள் தானே...!!!
ஊற்றெடுத்துப் பாயும்...
உண்மையின் தத்துவங்கள்...
தினம் தோறும்...
அவள் நினைவோ...
உணர்வுள்ள புத்தகங்கள்...!!!
என் வாழ்வில்...
நான் கண்ட...
கவிதை அவள்...
என்னோடு...
கை கோர்த்து நடக்கும்...
என்றும் மறையா...
புதுமைப் பெண்ணும்...
அவள் தானே...!!!
எனக்குள் கிடைத்த...
பொக்கிஷம் தானே...
என் சுவாசம்...
நின்று போகாத்....
துடிக்க வைக்கும் ...
என் உயிரானவள்...
அவள் இன்றி ....
வேறு யார் தானோ...!!!
No comments:
Post a Comment