Sunday, February 24, 2013

மலரவள்....!!!





புதுமை...
பூத்து விட்டது ...
வானம்...
பொழிந்து விட்டது...
இருந்தும் எதையோ...
என் மனம்...
தேடிநின்றது...!!!

காத்திருந்த...
கன்னிமனம்...
கவி பாடக்...
காணலையே...
காதுகொடுத்து...
கேட்பதற்கு....
அவள் இராகத்தில் தான் ...
ஸ்ருதி சேரலையே...!!!

பார்த்து இருந்தேன்...
பாவி மனம்...
வாடலையே...
பாதைகள்...
தேடி நின்றேன்...
அவள்...
வருகையைத் தான்...
காணலையே...!!!

மலர் தொடுக்க...
கொய்து பார்த்தேன்...
வலி கூட எடுக்கலையே...
மலரானவள்...
தேடிவந்து ...
சுகம் தான்....
கொடுக்கலையே..!!!

எனக்குள் பூத்தவள்...
என்னோடு வாழ்பவள்...
இதயத்தில்தான்...
நிறைந்தவள்...
என்றும் மலராகவே...!!!

No comments:

Post a Comment