தமிழன் கைகளில்...
கிடைத்து...
நழுவவிட்ட...
தழும்புகள்...!!!
போட்டிகள்...
பொறாமைகளை...
விழுங்கிக்கொண்டு...
துப்பவும் முடியாது ...
எதையோ...
தேடுகின்றோம்...!!!
பொய்கள் முன்...
சதுரங்கம் ஆடி...
சாதனைகள் படைக்க...
எங்களையே...
பலி கொடுக்கின்றோம்...!!!
மூட நம்பிக்கைகள்...
சுமந்துவந்து...
முதுகெலும்பை...
நொறுக்கிக்கொண்டு...
முண்டியடித்துப்...
போகத் துடிக்கின்றோமே...!!!
சிறுவயதில்..
தெளிக்கப்படுகின்ற...
விஷங்களா...
இல்லை எங்களுக்காக...
எழுதப்பட்ட...
தலைமுறை...
தத்துவங்களா...!!!
காலம் காலங்களாக...
கண்ணீர் கதைகள்...
தமிழன் தலையின்...
அரைக்கப் படும்...
அடிமை என்னும்...
கொடிய விழுதுகள்...!!!
தலை முறைகள்...
எப்பொழுது மாறுமோ...
தமிழன் தலை விதிகள்...
எப்போ தான் உணருமோ...!!!
No comments:
Post a Comment