Sunday, March 10, 2013

அட்டைப் பூச்சிகள்....!!!



இரத்தக் கோளாறுகளில்
மூளையை மக்க வைத்து
முதுகெலும்புகளை
தொலைத்து அலையும்
வல்லூறுகள் கதைகள்
எங்கே தான்
போய் முடியுமோ...!!!

காலங்கள் தேடி வந்து
பாடங்கள் புகட்டினாலும்
கோரப்பற்கள் மட்டும்
அடுத்தவன் மேனியை
சுவை பார்க்கத்தான்
துடிக்கின்றதே...!!!

உடலில் ஒட்டி இருந்த
துணியை
விற்றுத் தின்றுவிட்டு
அடுத்தவன் வீட்டில்
நோட்டம் இடும்
நோக்கம் தான் என்னவோ...!!!

காதுகளையும்...
கண்களையும் மூடிக்கொண்டு
பயணிக்கின்றேன்
என்னை அனைத்து
யார் தொடர்ந்தாலும்
நம்பிக்கையோடு
அவர்களையும்
அனைத்துக்கொண்டு
நானும் தொடருகின்றேன்...!!!

அட்டைப்பூச்சிகளும்
ஒட்டுண்ணிகளும் தானாகவே
விழுந்து அழிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்
நானும் பயணிக்கின்றேன்
புதுத்தெம்போடு...!!!

No comments:

Post a Comment