Sunday, March 10, 2013

தோழி...!!!



எனக்குள் நீ
உறங்குகின்றாய்
எனக்குள் நீ ஆசானாக
பிறப்பெடுத்து
தினம் வந்து புதிய செய்தி
சொல்கின்றாய்
முன்னோக்கி என்னை
தள்ளி விடுகின்றாய்
பின்னோக்கி நான்
விழுந்து விடாது.
என் சுமையையும்
தாங்கிக் கொள்கின்றாய்
என்ன தவம் செய்தேனோ
உன்னாமம்
நான் உச்சரிக்கவே...!!!

தோழி
உன்னைக் கண்டபின்பு
உரிமை எடுத்துக்கொண்டேன்
உன்னில் இருந்து என்னை
பிரிக்க முடியாத உரிமையை
நான் மட்டுமே
எடுத்துக்கொண்டேன்
நட்பின் பாடங்களை
தினம் ஒரு பந்தி
உன்னிடம் இருந்தே
கற்றுக்கொண்டேன்...!!!

மனம் கனக்கும்
தினம் ஏதோ
கணக்குப் போடும்
வாழ்வே விந்தையாக மாறி
உலகையே
வெறுக்கச் சொல்லும்
கண்மூடி என்னை மறந்து
உன்னை நினைத்துவிட்டால்
எல்லாமே மறந்து போகுமே
வாழத்தான்
மனதும் துடிக்குமே
தோழி உன்னிடம்
மயங்குகின்றேன்
உன் நட்புக்காக மட்டும்
ஏங்குகின்றேன்...!!!

No comments:

Post a Comment