Sunday, March 10, 2013

பெண்ணவள் தினம்...!!!



கண் விழித்த பொழுது
கருவில் அழகாய் சுமந்து
தன்னை உருக்கி
உலகுக்கு என்னைத் தந்தவளும்
அழகிய பெண் தானே.
அம்மா எத்தனை அற்புதங்கள்
உன்னை அழைக்கும் பொழுது
எத்தனை கண்ணியங்கள்.

பெண்ணுக்கொரு
சக்தி உண்டு
அழகாய் இந்த உலகை
மாற்றிடும் உன்னத
தகமை உண்டு
கணக்கிட்டு வாழ்ந்திடும்
மனதுண்டு
காலங் காலமாய்
ஆணிடம் அடங்கிப் போய்
சாதிக்கும் திறமை உண்டு.

மகளிர் தினம் என்று
பெண்களுக்கு ஏன் தான்
தனி ஒரு நாளோ
ஒவ்வொரு நாளும்
பெண்கள் தினம் தானே
தினமும் வாழ்த்துவோம்
பெண்களை தினமும் வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment