Monday, March 25, 2013

அழகிய தேன்கூடு...!!!






கண்கள் வியந்திடும்...
கனிவுகள் பிறந்திடும்...
பார்த்துக்கொண்டே...
மனமும் மயங்கிடும்...!!!

யாரும் நெருங்கா...
இதயங்கள் வென்றிடும்..
இன்பங்கள்...
தடைகள் போட்டு...
துன்பங்களை...
விரட்டிடும்...!!!

காத்துக் கறுப்புகள்...
நெருங்கத் தான் துடிக்கும்...
இவர்கள்...
வாசல் மட்டும் வந்ததும்,...
மனம் மாறித்தான் ...
இவர்கள் பக்கம்...
சாயத் துடிக்குமே...!!!

இணை பிரியாத...
சந்தோசங்கள்...
இவர்களுக்காக மட்டும்...
பிறந்ததேன்...
கடவுள்...
இவர்கள் பக்கம்....
மட்டும் சாய்வதேன்...!!!

கூண்டுக்கிளிகள்...
இல்லை இவர்கள்...
சுதந்திர ராகம் பாடும்...
சுமைகள் அற்ற....
சுதந்திர கிளிகள்...!!!

தேன்கூடு கலையாது...
களையும் கூடும் இல்லை...
சந்தோஷ கதவுகள்...
மட்டுமே அதிகம்...
அதில் எங்கே அராஜகம்...
பிறக்கும், பிழைக்கும்
எறியும் கற்களும்...
ஏதோ ஒரு...
திசைக்கு போகட்டும்...
இயலாமைகள்...
ஆமை வேகத்தில்....
நகரட்டும்....!!!

தேன்கூடு சுவையானது...
பிரிக்க முடியாதது...
பிரித்துப் பார்க்க...
நினைப்பவர்கள் உள்ளம்...
ஊமையாகட்டும்...!!!

No comments:

Post a Comment