படித்து முடியாத...
படிக்க தோன்றாத...
பல காவியங்கள்...
மறைந்து,மறந்து ...
கிடக்கின்றதே...!!!
யாருக்கு...
என்ன மோகமோ....
எதனை இழந்து...
எதனை அடையத்...
துடிக்கின்றோம்...!!!
எல்லாமே...
ஏதோ ஒரு வேகத்தில்...
முட்டி மோதுகின்றனவே...
முடிவு தான் தெரியாது...
வாழத் துடிக்கின்றனவே...!!!
எல்லாமே...
ஒரு நம்பிக்கை...
காலங்கள் நமக்குள்...
கட்டுப்பட்டு விட்டதாக...
இது...
கனவுகளின் நிஜங்களா...
இல்லை...
நிஜங்களின் நினைவுகளா...!!!
பூட்டை...
தொலைத்துவிட்டு....
சாவியை மட்டும்...
நம்பி வாழ்கின்றோம்...
புதுமைகள்...
ஆழ்கின்றன...
பாசத்தோடு பழமைகள்...
விடை பெற்றுவிட்டன ...!!!
மூக்கணாம்...
கயிறு போல்...
இழுத்த...
இழுப்புக்கெல்லாம்...
தலைகளை ஆட்டியே...
பழகிக்கொண்டோம்...!!!
வாழ்க்கை...
ஒரு சுவையான கூடாரம்...
வாழத் தெரியாது...
கூரைகளை பிய்த்தெறிந்து...
கை விரல்களாலேயே...
வானத்தை...
மறைக்க பார்க்கின்றோமே...
படிக்க முடியாத...
புத்தகத்தை...
கிழிக்காமலாவது ...
விட்டு வைப்போமா...
இல்லை...
மனிதனால் முடியாத...
ஒன்றை சிந்திக்கின்றேனா...!!!
[கவிஞர் இராஜேந்திரா]
No comments:
Post a Comment