Monday, March 25, 2013

சிறை பிடித்த கைகள்...!!!



அன்புக்கு...
கட்டுப் பட்டுத்தான்...
அடங்கிக் கொண்டேனா...
இல்லை அதிகார...
முத்திரை இட்டதால்...
மயங்கி விட்டேனா...

மொத்தத்தில்...
என் மனமோ...
மோதி பார்க்கின்றனவே...
முடியாததினால்...
மௌனமாகின்றதே ...!!!

நித்தம் ஒரு கணக்கு...
தேடி வந்து...
விடை தெரியா...
திரும்பி செல்கின்றதே...!!!

விடை தெரிந்த நானும்...
விளக்கம்...
இல்லாதவன் போல்....
வீம்புக்கு...
சாதிக்கின்றேனா ...
எனக்குள்...
முட்டி மோதியே ...!!!

தலைவிரி கோலங்கள்...
தள்ளாடுகின்றன...
தங்கள் மொழிகளிலேயே ...
பரிதவிக்கின்றன...
பார்த்திருந்த...
என் கண்களுக்கு...
கண்ணீர்கள் தான்...
விருந்தாகின...!!!

சிந்தனை சிறைகளில்...
தள்ளப் பட்டேன்...
கை விரல்களில்...
விலங்கிட்டு...
எதையோ வடிக்கின்றேன்...
என் இதயத்தில்...
விழுந்த கீறல்களை...
மறைத்துக்கொண்டே...!!!

மயங்கியது இல்லை...
மயக்கமும் என்னை...
அணைத்ததும் இல்லையே...
இன்று மட்டும் ஏன்...
சிறையானேன்...
சிந்தனைகளை...
சிதற விட்டதால் தானோ...
சிறையானேன்...!!!

No comments:

Post a Comment