Monday, March 25, 2013

பொறுமை...!!!





பெருமைகள்...
உன்னை தேடிவரும்...
திறமைகள்...
உன்னைச் சுற்றியே...
வேலி போடுமே...!!!

உன்னை யாரும்...
அளவெடுத்து...
விட முடியா ...
மௌனமே...
உன்னைக் காத்திடுமே...!!!

மரியாதை...
உனக்கு கிடைக்கும்...
பொக்கிஷம் தானே...
பொறுமையால் வந்த...
வைர கிரீடம் தானே...!!!

வார்த்தைகளால்...
வாதம் செய்வதில்...
என்ன பெருமையோ...
வேதனைகள் சுமப்பதில்...
என்ன தான் தர்மமோ...!!!

காலங்கள்...
எவ்வளவோ...
மாற்றங்கள் கண்டு...
மறைந்து விட்டன...
மனிதனின்...
பதட்டங்கள் மட்டும்....
மறையவில்லையே...!!!

ஏற்றத் தாழ்வுகள்...
தினம் தினம்...
பிறந்துகொண்டே...
ஆட்கொள்கின்றதே...
அதை முறியடிக்க...
முடியா தடுமாற்றங்கள்...
மனதில் உறவு கொள்ளுதே...!!!

பொறுமை....
உன் உடலுக்கும்...
உன் உள்ளத்துக்கும்...
ஊக்கம் கொடுத்து...
உண்மை...
மனிதனாக மாற்றிடுமே...!!!

No comments:

Post a Comment