Monday, March 25, 2013

சந்தர்ப்ப வாதிகள்...!!!





உலகில்...
வாழப் பிறந்த...
உண்மையானவர்கள்..
உலகம் புரிந்து...
தங்களை மட்டும்...
காத்துக்கொள்வதில்...
வல்லமையானவர்கள்...!!!

வேதாந்தம் பேசி...
தானும் மூடனாகி...
மற்றவர்களையும்...
மட்டம் தட்டத் துடிக்கும்...
மானிடர் முன்னே....
இவர்கள்....
புனிதமானவர்கள் தானே ...!!!

எத்தனை....
மனித மனங்கள்...
சுத்தம் செய்ய முடியா...
மாசற்றுப் போய்...
தடுமாறுகின்றனவே ...!!!

சுத்தம் செய்யப் போனவன்...
முதுகுகள் தான்...
கிழிக்கபட்டு...
சிதைந்த....
கதைகள் தானே எத்தனையோ...!!!

இவர்களால்...
யாருக்குத் தான்...
என்ன பாதகமோ...
யார் அழிந்த...
கதைகள் தான் ஏராளமோ...
அதனால்...
இவர்களுக்குத் தான்...
என்ன படு பாவமோ...!!!

காற்றுள்ள பொழுதே....
தூற்றிக் கொள்கின்றார்கள்....
காற்றடிக்கின்றது...
இவர்கள் பக்கம்...
காத்திருக்க வேண்டிய...
அவசியம் தான் என்னவோ....!!!

கடைசியில் பாடைகள்...
எல்லோருக்கும் தானே...
உயரிய சிந்தனை...
கொண்டவனுக்கு...
தனியான சமாதியா....
கிடைத்து....
விடப் போகின்றது...!!!

வாழும் வரை...
வாழ்ந்து விட்டு...
போகின்றார்கள் ...
அதிலே சாமானியர்கள்...
உண்மையில்...
இவர்கள் தானே....!!!!

No comments:

Post a Comment