Monday, March 25, 2013

மாயம்...!!!





மனித மனங்கள்...
தினம் தினம்...
கரைந்து போகின்றதே...
கண்ணீர்களும்...
வற்றிப் போகின்றதே...!!!

பாசங்களில்...
கீறல்கள் விழுந்து...
வேசங்களாக பிறப்பெடுத்து...
பூமியை ஆட்கொண்டு...
மனித மனங்கள்...
அங்கலாய்க்கின்றனவே!!!

ஆறுதல் சொல்வதாக...
மாறுதல்...
காணத் துடித்து ...
எதனை ஏற்றுக்கொண்டோம்...
எதனை இழந்ததினால்...!!!

கோயில்களில் கும்பாபிசேகம்...
மடங்களில் அன்னதானம்...
எங்கள்...
இதயங்கள் மட்டும்
ஏன் தான் ...
தீட்டுப் பட்டது போல்...
தடுமாருகின்றதோ...
தரம் இழந்து எதனை...
காணத் தான் துடிக்கின்றதோ...!!!

பாதைகள்...
வகுத்துக்கொண்டு...
பள்ளங்களில்...
தடுமாறுகின்றோம்...
பாவிகளாக...
தடம் மாறத் தான்...
இத்தனை போட்டிகளா ..
எத்தனை அவசரங்களா...!!!

மாயம்...
மோகம் கொண்டதே...
மௌனத்தில் மட்டும்...
உன்னை...
ஆட்கொள்ளப்...
பிறந்ததே...!!!

மாயம்...
உன்னை விட்டு...
தொலைந்து விட்டால்...
மீண்டும்...
மனிதனாகி விடுவாய்...
மனித மனங்களில்...!!!

No comments:

Post a Comment