Sunday, March 24, 2013

தொலைந்த கவிதை...!!!




பாடித் திரிந்த
கிளி ஒன்று
இன்று வாடிப்போய் வாயிழந்து
வாழ்வு இழந்ததோ
வருத்தப் பட்டு
நாவிழந்ததோ
கண்ணீர் சிந்தத்தான்
நதிகள் தேடுகின்றதோ
நான் அறியேன்...!!!

முத்தத்தில் ஈரம் உண்டு
உன் சத்தத்தில்
சலங்கை கீதம் உண்டு
உன் பார்வையில்
பல வண்ணமுண்டு
அதனை பார்க்கத்தான்
தினமும் எனக்கும்
எண்ணமுண்டு...
மொத்தத்தில் உன் வார்த்தையில்
மௌனம் கண்டு
வாடிப்போகின்றேன்
நானும் இன்று...!!!

தென்றல் காற்றே
உன் கவிதை கீதம்
மறைந்தது ஏனோ
கனாக்காலங்களில் நீயும்
தொலைந்தது தானோ
கால் தடம் பதித்து உன்
கவிதைகளை புதைத்து
செல்கின்றாய் புரியாத புதிராய்
உன்னை நீயும்...
புதைத்துக்கொண்டே...!!!

No comments:

Post a Comment