Sunday, March 24, 2013

எதிர் பார்த்தேன்...!!!





ஏக்கங்கள் சூழ்ந்த
உலகத்தில்
உண்மைகள்
எப்படி உயிர் பெறும்
ஊமைகளாகி
மந்தைகள் போல்
வாழ்வும் இருள்கின்றதே
தினம் ஒரு பாடத்தை
புகட்டிவிட்டே செல்கின்றதே...!!!

மரத்துப் போய்
மனித அவலங்கள்
புதையல்களாக கொட்டிக்
கிடக்கின்றனவே
சுவை பார்க்கத்தான்
ஏங்கும் உள்ளங்கள்
நிறைந்து துடிக்கின்றனவே...!!!

தேன் கூடுகளில் சுவைகள்
மறைந்து
நீர் மட்டும் நிறைந்து
கிடக்கின்றன
மனதுகள் தடம் பிரண்டு
தவம் கிடக்கின்றன
எல்லாமே ஒரு
மாயையாகவே
உணர்வும் வந்து
உண்மை
சொல்லிப் போகின்றதே
எதிர் பார்த்தேன்
என்னவென்று புரியாமலேயே
எதிர் பார்க்கின்றேன்...!!!

No comments:

Post a Comment