Wednesday, March 27, 2013

நிஜங்கள்...!!!



கண்களால்...
பார்த்துவிட்டு...
கதைகள் பேசி...
பழகிவிட்டோம்...!!!

உண்மைகள்...
உறங்கிக்...
கொள்கின்றன...
உணர்வில்லாது...
பொய்மையில் மட்டும்...
பூரித்துப்...
போகின்றோமே...!!!

ஏதோ ஒரு சக்தி...
நம்மை முடக்கி...
ஆளத்...
துடிக்கின்றதே...
அருவெறுத்துப் ....
போகின்றதே...
இயலாமையின்...
இறுக்கத்தினால் தானோ...!!!

கல்லிதயங்கள்...
கருக்கட்ட தொடங்கி...
முற்களில்...
பாய் விரித்து...
முகம் புதைத்து...
எதையோ...
கணக்குப்...
போடுகின்றனவே...!!!

காலம் போடும்...
கணக்கை புரியாது...
நாங்கள் போடும்...
தப்புக்கணக்கால்...
உவகை...
கொள்கின்றோமே...
புரியாது வாழ்வில் ...
புரியாத மனிதர்கள்...!!!

புனிதத்தை இழந்து...
புதுமைகள் தேடி...
புழுவாகின்றோம்...
நிஜங்கள்...
இறந்துக்கொண்டே...
இதயத்தை....
வதைக்கின்றனவே...!!!

No comments:

Post a Comment