Monday, March 25, 2013

திரை மறைவில்....!!!





கல் மனங்கள்...
கண்ணீரில் கரைகின்றது...
காதல் கொண்ட...
உள்ளங்களோ...
உண்மையில்...
உதிர்கின்றது ...!!!

பாதை...
வகுத்துக் கொடுத்தவன்...
வார்த்தைகள்...
வழி தெரியா..
விழி உடைந்து...
இருண்டு போகின்றதே...!!!

பாசங்கள்..
போட்டி...
போட்டுக்கொண்டே..
வேஷங்கள் போட...
பழகிக் கொண்டதே...
புற முதுகில்...
எதனைத்தான்...
எழுதுவேனோ...!!!

கண்டதெல்லாம்...
கண்கட்டி வித்தையாகத்...
தெரிகின்றதே...
ஏமாற்றங்கள்...
எனக்குள் விதையாகி...
விருட்சம் கொண்டதே...!!!

திரை மறைவில்...
இருந்துகொண்டே...
பல கண்கள்...
என்னை...
குறிவைக்கின்றதே...!!!

பகல் கனவில்...
வாழ்ந்து...
பழகி விட்டேன்...
புதுக் கனவுகள்...
புதை குழிகளாக...
கண்களை...
பறிக்கின்றதே...!!!

தினம் வாழ்கின்றேன்...
தீண்டாது...
என்பக்கம்...
சிறை...
வைக்கத் துடிக்கும்...
அன்பு உள்ளங்களால்...
தினம் வாழ்கின்றேன்...!!!

No comments:

Post a Comment