Wednesday, March 27, 2013

அமைதி தேடி...!!!



எதனை...
சாதித்தாய்...
உன் வாழ்வில்...
எதனை இழந்தாய்...
உன்னை மறந்து...!!!

உனக்குள் உன்னை...
நொந்து கொள்கின்றாய்....
உதிரம் வழியா...
திரை மறைவில்...
தினம் தினம்...
வெந்து கொள்கின்றாய்...!!!

வாழ வைத்தவர்கள்...
மனதை கிழித்து...
உன் மன...
சாந்தி வேண்டி...
தேடித் போவதில் தான்...
என்ன நாட்டமோ...!!!

பூ வைத்து...
பொட்டு வைத்து...
வாழ வேண்டியவளே...
பூஜை அறையில்...
மண்டியிட்டு...
எதனைத் தேடுகின்றாய்...!!!

காலத்தை...
நீ தொலைத்தையா...
கன்னித் தன்மையை...
இழந்தாயா
கண்ணீரை மட்டும்...
சொந்தமாக்கி...
செத்து மடிகின்றாயே...
யாருக்காகவோ...!!!

வாழவேண்டியவளே...
வாழ்வு...
ஒரு முறை தான்...
வாழ்ந்து பார்...!!!

வாழ்வில் ஒளி....
வீசவேண்டியவள் நீ...
நீயே அழிந்து போகலாமா...
உனக்காக....
பல பேர் கண்ணீர்கள்...
வழிந்து ஓடலாமா...!!!

No comments:

Post a Comment