Wednesday, March 27, 2013

ஆசிரமம்...!!!



ஆதங்கங்கள்...
அமைதியாகி...
அழுகைகள்...
வெளியே தெரியாது...
அடங்கிடும்...
கூடம் தானே...!!!

எத்தனை...
கற்பனைகள்...
எத்தனை...
சந்தோசங்கள்...
எத்தனை...
பாசத் துடிப்புகள்...
அத்தனையும்...
அடங்கிடும்...
உறைவிடம் தானே...!!!

கண்களில்...
எத்தனை கனவுகள்...
சுமந்தோர்...
காயப்பட்டு...
இதயம் மட்டும்...
நொந்து...
இல்லாத
வாழ்விற்காக ஏங்கி...
வருத்திக்கொள்ளும்...
உறவுகள் தான் எத்தனை...!!!

பாவ மூட்டைகள்...
உலகமே...
சுமக்கின்றதே...
பாச மூட்டைகள்...
சுமக்க முடியாது...
அடங்கிகொள்ளும்...
ஆத்மாக்கள் தான்....
எத்தனையோ...!!!

கால ஓட்டத்தில்...
கனவுகள்...
ஆசிரமங்களில்...
புதைந்து...
விடுகின்றனவா...
இல்லை...
புதைக்கப் படுகின்றனவா...
இதயம்...
கொதிக்கின்றதே ...
உண்மை புரியாமலேயே...!!!

No comments:

Post a Comment