Monday, March 25, 2013

தோல்வி...!!!






சக்தியையும் புத்தியையும்...
தீட்டிவிடும்...
கூர் தீட்டிய...
ஆயுதம் தானே!!!

சோர்ந்துவிடாது...
உன்னை...
உணர வைத்து
நுணுக்கங்களை...
கற்றுத் தரும்...
போர்வாள் தானே...!!!

காலம் உனக்கு...
சொந்தமானது...
பாதை மாறது...
பயணம் செய் மனிதா ...!!!

கண்டதை....
மனதில் கொண்டு ...
திண்டாடுவதில்....
எதனைக் கண்டாயோ...!!!

வெற்றி போதை...
உனக்கு...
கிடைத்திவிட்டால்...
வந்த பாதை...
நினைத்துப் பார்ப்பாயோ...!!!

தோல்வி கண்டு...
துவண்டு விட்டால்...
சொந்த காலில் தான்...
வாழ நினைப்பாயோ...!!!

தினமும் ஒரு...
போதி மரம்....
தோல்வியாக வந்து...
உனக்கு உரம் ஏற்றி...
செல்கின்றதே...!!!

வெற்றிக் கனிகள்...
கையில் ஏந்தி...
இறுமாப்பு கண்கள்
உன்னை மறைக்காது ...
தோல்வியின் வலிகள்...
உன்னை தினம் தினம்...
காத்திடுமே...!!!

No comments:

Post a Comment