உன் வரவுக்காக
மலர்கள் தூவி வாசலில்
காத்து இருந்தேன்
காலை முதல் நான் இங்கே...!!!
நீ வராதது கண்டு
நானும் பூத்து
வாடி நின்றேன்
மாலை நேரத்திலே
மயங்கினேன்
மயங்க வைத்த
நீயும் எங்கே...!!!
கூண்டுக்குள் நீயும்
தூங்கிக்கொண்டு
கூவ நினைக்கின்றாய்
உன் கீதம் கேட்டு நானும்
உன் முகம் காண
தேடி
தவம் கிடக்கின்றேன்...!!!
ஒலி வந்ததிசையில்
என் கண்கள்உடைத்து
ஒளி தருகின்றேன்
என்னை மறந்து
நானும் வாடுகின்றேன்...
எங்கே போனாயோ
இல்லை யாரிடம்
மாட்டிக்கொண்டாயோ...!!!
என் உயிர்
போகட்டும் என்று
என் மனது மட்டும்
ஏங்குகின்றதே
உன் முகம்
கண்டபின்பு தான்
நானும் வாழ வேண்டும்
என்று தான்
என் உயிரும்
துடிக்கின்றதே
என் உயிரே
எங்கே சென்றாய்
என்னை வாழவைக்க
ஒரு முறை
பிறந்து வா என்னவளே...!!!
No comments:
Post a Comment